Thursday, June 2, 2011

நான் நேசிப்பன யாவும்.


உன்னில் தொடங்கி 
உன்னிலேயே முடிகின்றன
நான் நேசிப்பன யாவும்.
===========================================

உன் இதயத்தை 
கட்டுக்குள் வைத்திருக்கும் நீ 
உன் கண்களை விட்டுவிட்டதேன்!! 
என் மீதுள்ள காதலை 
காட்டி கொடுக்கின்றன பார்!!!
============================================
Thanks to Google for the Images

ஓடும் பேருந்தின் சன்னல்களை சல்லடை போட்டு 
தேடுகிறேன் -வேலை பார்க்கும் கணினி முகத்திரையை 
சலிக்கிறேன்- உடைந்த கண்ணாடி சில்லுகளில் 
பார்க்கிறேன்- குளிக்க போகும் வெந்நீரில் கூட
தேடுகிறேன் -இட்லி போட வைத்த தட்டில் உற்று 
பார்க்கிறேன்- உன் முகம் தெரிகிறதா என்று
இதுதான் காதலா !!! 

=====================================================
அன்புடன்
அசோக் குமார்

No comments:

Post a Comment