Monday, June 13, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்- பகுதி 4

என்றும் கேட்க கேட்க திகட்டாத பாடல்களை தொகுத்து வருகிறேன் அந்த வரிசையில் இன்றும் சில, காலத்தை வென்று நிற்கும் பாடல்கள்


படம்: அவள் அப்படிதான் 
பாடல்: உறவுகள் தொடர்கதை....

K .J . யேசுதாசின் வசீகர குரலில் இந்த பாடல் ஒரு தாலாட்டை போல. இந்த பாடலை எந்த நேரத்தில் கேட்டாலும் உற்சாகம் கரைபுரளும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.


படம்: புவனா ஒரு கேள்விக்குறி 
பாடல்: விழியிலே மலர்ந்தது....

இளையராஜாவின் முத்துக்களில் ஒன்று. ரஜினி தன்னை நல்ல நடிகனாக காட்டிய படங்களில் இதுவும் ஒன்று. 


படம்: கவிக்குயில் 
பாடல்: சின்ன கண்ணன் ....

சாஸ்திரிய சங்கீதத்தின் மேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கர்னாடக சங்கீத நெடியே இல்லாமல் பாடிய பாடல். 


படம்: அடிமை பெண் 
பாடல்: ஆயிரம் நிலவே வா...

SPB பாடிய முதல் பாடல் என்றும் இல்லை என்றும் பல சர்ச்சைகள் உண்டு. ஆயிரம் இருந்தாலும் அவருக்கு திரை பாடகராக பெரிய பெயரை பெற்று தந்த பாடல். 

படம்: காதலிக்க நேரமில்லை
பாடல்:நாளாம் நாளாம் திருநாளாம் ...

இயக்குனர் ஸ்ரீதர் படங்களில் பாடல்களுக்கு தனி முத்திரை உண்டு. சுசீலாவும் PB ஸ்ரீநிவாசும் இணைந்து பாடிய பாடல். 


அன்புடன் 
அசோக் குமார்

4 comments:

  1. காலாத்தால் அழியாத பாடல்களை தந்ததற்கு நன்றிகள்..

    ReplyDelete
  2. காலாத்தால் அழியாதகலக்கல்.... பாடல்களை தந்ததற்கு நன்றிகள்

    ReplyDelete
  3. very very nice song...
    i like this song...
    "congratulation"

    ReplyDelete