Wednesday, October 14, 2015

நான் மீண்டு விட்டேன்.

நான் இந்த தளத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். காலம் தான் எத்தனை பெரிய அரக்கன். இந்த இரண்டு வருடங்களில் என் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தேறி விட்டன. தனிமையில் காலத்தை தள்ளிக்கொண்டு இருந்த நான் இன்று இரண்டு சொந்தங்களை அடைய பேறு பெற்று இருக்கிறேன். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை அறியாதவன் அல்ல நான். ஆகையால் இந்த மாற்றங்கள் எனக்கு சிறு சங்கடங்களை கொடுத்தாலும் நான் பேறு மகிழ்ச்சியையே இந்த நொடி வரை அனுபவித்து கொண்டிருக்கிறேன்.

வசந்தம் மீண்டும் தொடரும்