Thursday, February 15, 2018

காதலர் தின கவிதை


Wednesday, July 13, 2016

நான் ரசித்த கீச்சுகள் 13/07/2016

ஒ.உ.சிந்தனைகள் ‏@bommaiya
நாயர் கடைங்கள்ல  டீ சாப்பிடுற அத்தன பேரும் மிடில் கிளாஸ் தான் # அவர் என்னைக்கு நமக்கு  ஃபுல் கிளாஸ் டீ  போட்டுக் கொடுத்திருக்கார்...!
---------------------------------------------------------------------------------------------
sʍιʟɛʏ вօʏ™ ‏@smileyB0Y
கடைசியில் எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள்.😊
சரியாகவில்லையென்றால்,
இது கடைசி இல்லை என்று நம்புங்கள்..😎
----------------------------------------------------------------------------------------------
ஜெய் VJ ‏@i_am_v_jey  
எல்லாருடைய தேடுதலும் அன்பாய் இருப்பதினால் தான்..எல்லாருடைய குற்றசாட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்பதாய் இருக்கிறது..

----------------------------------------------------------------------
 ✍கிரியேட்டிவ் ЯΛJ ™ ‏@CreativeTwitz  
இந்த உலகத்துல 
கடமைச் செய்யவே 
காசு எதிர்பார்க்குது சமூகம் 
கருணை காட்ட 
காசு எதிர்பார்க்கதா

--------------------------------------------------------------------
காம்ரேட் பாலா ‏@SelvarajanBala  
நாடு கேட்பது தீவிரவாதம் என்றால் 
நாடு கேட்பது பயங்கரவாதம் என்றால்
என்ன மயிருக்கு பிரிட்டிஷ்காரன்கிட்ட நாடு கேட்டீங்க?

------------------------------------------------------------------------------------------
குழந்தை அருண் ‏@aruntwitz  
3G நெட் கார்டு போட்டு, வேலிடிட்டி டைம் முடியும் போதும், டேட்டா பேலன்ஸ் மிச்சம் வைத்திருப்பவர்களால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.

--------------------------------------------------------------------------------
காம்ரேட் பாலா ‏@SelvarajanBala  
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

---------------------------------------------------------------------------
 ⭐PãlãñîKÎÑG ⭐VJ ‏@palanikannan04  
ஒருபுறம் மரம் வளர்ப்போம்னு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசாங்கம்,

மறுபுறத்தில் கான்டிராக்ட் விட்டு காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது..

----------------------------------------------------------------------

ர.விவேக் ‏@vivekchandran07  
எப்படியும் விமர்சனம் செய்யத்தான் போகிறீர்கள், ஆதலால் நான் நினைத்ததை அனைத்தும் கூச்சமின்றி செய்யப்போகிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

Friday, March 18, 2016

கோட்டை ராணியும் என் சகுன அனுபவமும்


ஒவ்வொரு மனிதரிடம் இருந்தும் பாடம் கற்கலாம் என உணர்த்திய அனுபவத்தை தான் எழுதலாம் என்று இருக்கிறேன். என் பால்ய காலங்களில் நண்பர்களாலேயே  அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டவன் நான். நான் உறங்கும் நேரம் உணவருந்தும் நேரம் தவிர ஊரின் நடுவே இருக்கும் அரசமர்த்தடிதான் எங்கள் ஊரின் மொத்த இளசுகளுக்கும் வேடந்தாங்கல். கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்கிறேன் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பாளி அல்லன்.


அந்த வயது பால்யங்களுக்கு உண்டான குறும்பும் கேளிக்கைகளும் எனக்கும் உண்டு என்றாலும் அதில் நான் பங்கேற்பதில்லை. எட்ட இருந்து ரசிப்பதோடு சரி. என்னைப்பற்றி ஏதேனும் புகார் வந்தால் எங்கள் வீட்டின் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்து விடும் அந்த பயம் தான்.

இப்போது இருப்பது போல் கழிப்பிட வசதியால் பற்றி பெரிய அளவிற்கு விழிப்புணர்வு கொண்டதல்ல எங்கள் ஊர். காலையில் எழுந்தவுடன் எங்கள் ஊரிலே பெரிய பணக்காரர் ஒருவருடைய கொல்லையில் தான் எங்கள் ஊர் முழுவதும் சென்று எருவிடும். கதைக்கு செல்லும் முன் இந்த கதை நாயகியை பற்றி சொல்லியாகவேண்டும்.

வயது அப்போதே எழுபதை தொட்டு இருக்கும். குழி விழுந்த கன்னங்கள். சற்றே கூன் விழுந்த தேகம். என்னை என்னும் வஸ்துவையே பார்த்திராத நரைத்த தலை. மண்வாசனை காந்திமதி போல் பேச்சில் எப்போதும் ஒருவித அதிகாரம். இத்தனை விசயங்களுக்கும் சொந்தக்காரிதான் "கோட்டை ராணி". அவளுக்கு உண்மையான பெயர் எங்களுக்கு தெரியாது. ஏன் அவளுக்கு "கோட்டை ராணி" என்ற பெயர்  வந்தது என்றும் எங்களுக்கு தெரியாது.
ஒல்லியான, சுருக்கங்கள் விழுந்த சுமாரான உயரம். யாரையும் எடுத்து எரிந்து பேசும் குணம். வம்பு சண்டைக்கும் போவாள் வந்த சண்டையையும் விடமாட்டாள்.ரோட்டில் போகும் நாய் கூட இவள் வீடு வந்தால் வேகமாய் கடந்து போய் விடும்.

இப்படியாக இருந்த கோட்டை ராணியிடம் சுடு சொல் வாங்க போகிறோம் என தெரியாமலே விடிந்தது. வழக்கம் போல் என் நண்பனும் வந்தான். என்ன டா  மணி ஆச்சு... போலாமா என்றான். நானும் அவனும் கெளம்பி போய்கொண்டு இருக்கையில்....................திடீர் என எங்கள் எதிரில் வந்து நின்றால் கோட்டை ராணி. காலையில் வாசல் சுத்தம் செய்ய மாட்டு சாணம் அள்ள செல்கில்றால் போல் பட்டது. அவளை பார்த்து விட்டு போனால் எந்த காரியமும் நடக்காது என ஊர் முழுக்க பேச்சு. என் நண்பனுக்கு அது ஞாபகம் வந்துவிட்டது போலும். என்ன நினைத்தானோ அவளை பார்த்த மாத்திரத்தில் என் கையை பிடித்து வந்த வழியே திரும்ப இழுத்தான்.

நாங்கள் அவளை பார்த்து உடனே திரும்புவதால் கோட்டை ராணியும் கண்டுவிட்டாள். நாங்கள் திரும்பிய திசையை பார்த்து " ஏண்டா என்னை பார்த்துவிட்டு போனால் உங்களுக்கு வருவதும் நின்னு போயிடுமோ? என்று கேட்டாளே ஒரு கேள்வி. எங்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. நான் ஒன்றுமே பேசவில்லை. என் நண்பன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வந்தான்.

அன்றில் இருந்து யாரும் சகுனம் என்று சொன்னாலே கோட்டை ராணியின் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை. 

Monday, March 14, 2016

நான் ரசித்த கீச்சுகளின் தொகுப்பு

போதிசத்வன் ‏@yasavi  
காதல் ஜோடிய வெட்டினப்புறம் திமிரோட ட்ரிபுள்ஸ் போரானுங்க பாருங்க!!! கண்டிப்பா புடிச்சு ஃபைன் போட்டே ஆகணும்!! ராஸ்கல்ஸ்!!  #சட்டம்

------------------------------------------------------------------------------------------------
மீனம்மா ‏@meenammakayal 
ஆற்றங்கரை, மாந்தோப்பு, கிணற்றடி, க்கு சற்றும் ஈடாகாது தற்காலத்தின் மால், சினிமா, பீச் ஊர்சுற்றிக் காதல் தனிமைகள்.

------------------------------------------------------------------------------------------------
 
Janu_B ‏@JanuBhaskarG
யாருமில்லையேனு தோணும்போ கஸ்டமர்கேருக்கு போன் போட்டு பேசினா போதும். அவங்களோட பணிவான பேச்சு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..

-----------------------------------------------------------------------------------------------------
ǟռռǟɮɛʟʟɛ...!! ‏@jeniferak2  
சொர்க்கத்தின் வாயிலில் நின்று கொண்டு நரகத்திற்கு வழி கேட்டானாம் :-|

----------------------------------------------------------------------------------------------------

The Neel ‏@YoursNeel  
பகுத்தறிவு என்பது ஆறறிவுல்ல மனித இனத்திற்கு மட்டுமே படைக்கப்பட்டது.அஃதல்லாதவர்கள் மனித இனங்களில் வாரா.

-----------------------------------------------------------------------------------------------------
தேன்மிட்டாய் IPS ‏@Ohmslaw_  
பேசிகிட்டே இருப்பது மட்டுமல்ல,புரிந்துக்கொண்டு பேசாமலிருப்பதும் அன்பு தான்.

----------------------------------------------------------------------------------------------------

இளந்தென்றல் ‏@Elanthenral
ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டதும் 
அச்சச்சோன்னு சொல்றவன்லாம் புத்தனுமில்லை 

அத இமிட்டேட் பண்ணி கூவுறவன்லாம் கல் மனசுக்காரமில்ல
-------------------------------------------------------------------------------------------------------
மீனம்மா ‏@meenammakayal  
விரோதிகளிடம் வாழ்ந்து காட்டுவதில் எல்லாம் விருப்பம் இல்லை. என்னை விரும்புபவர்களின் மகிழ்வுக்காகவேணும் நன்றாக வாழ ஆசை.

------------------------------------------------------------------------------------------------------
பிரம்மன் ‏@altappu  
அம்மா வாய் வழியா புக்கை தூக்கி போட்டு வயித்துல இருக்கற குழந்தைக்கு ஏன் ஹோம் வொர்க் தர்றதில்லை?! பத்து மாசத்தை வேஸ்ட் பண்றானுகளே 

-------------------------------------------------------------------------------------------------------
 
சட்டம்பி கடவுள் ‏@stalinsk50
நான் தெரிந்தே செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்படும் போது அது எனக்கு தெரியாமல் நடந்த தவறாகிவிடுகிறது..

-----------------------------------------------------------------------------------------------------
✯சண்டியர்✯ ‏@BoopatyMurugesh  
எங்க CEO மகளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..இல்லைனா நான் வேலை பார்க்குற ஆர்வத்த பார்த்து எனக்கே கட்டிவச்சுருவாரு...

----------------------------------------------------------------------------------------------------
குழந்தை அருண் ‏@aruntrichy0  
நம்ம பிரச்சினைக்கு அடுத்தவர்கள் சொல்லும் அட்வைஸ், ஆலோசனையாக மட்டுமே இருக்கலாம், அதுவே தீர்வாகி விடாது.

----------------------------------------------------------------------------------------------------
வி.தமிழ் சுகி ‏@Tamilsuhi  
எது மகிழ்ச்சி என்ற 
ஓர் நீண்ட தேடலில் 
முன் நாளில் துன்பம் என 
தூக்கி வீசப்பட்ட ஒன்று 
முன் நிற்கிறது

-----------------------------------------------------------------------------------------------

Wednesday, October 14, 2015

நான் மீண்டு விட்டேன்.

நான் இந்த தளத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். காலம் தான் எத்தனை பெரிய அரக்கன். இந்த இரண்டு வருடங்களில் என் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தேறி விட்டன. தனிமையில் காலத்தை தள்ளிக்கொண்டு இருந்த நான் இன்று இரண்டு சொந்தங்களை அடைய பேறு பெற்று இருக்கிறேன். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை அறியாதவன் அல்ல நான். ஆகையால் இந்த மாற்றங்கள் எனக்கு சிறு சங்கடங்களை கொடுத்தாலும் நான் பேறு மகிழ்ச்சியையே இந்த நொடி வரை அனுபவித்து கொண்டிருக்கிறேன்.

வசந்தம் மீண்டும் தொடரும் 

Saturday, March 31, 2012

நான் பேச்சிலராக இருப்பதில் என்னை விட வருத்தபடுபவர்கள்

தினமும் ஒரு மணி நேரமாவது பேசும் உற்ற நண்பன் காதலி கிடைத்ததில் இருந்து தலைமறைவு#ஒவ்வொருத்தருக்கு ஒரு பீலிங்
**********************************************
தூண்டிலைப்போட்டு மீனுக்காக காத்திருப்பவனிடம் தான் கேட்கவேண்டும் பொறுமையின் மகத்துவம்#தத்துவம்
**********************************************
தமிழின் மகத்துவம் தமிழ் நாட்டில் வாழும் வரை புரியவே இல்லை # என்னவாக இருக்கும்
***********************************************

மழை பொத்துகிட்டு ஊத்துது. வானத்துள் ஓட்டை ஏதும் விழுந்திருக்குமோ #டவுட்டு
*************************************************

குழந்தையாய் இருக்கும்போது தீபாவளிக்கு பணம் போதாதென்று உண்ணாவிரதம் இருப்பதில் ஆரம்பிக்கிறது நம் போராட்டம் #வாழ்க்கை
***************************************************
என்னை விட என்னை சுற்றி இருப்பவர்களுக்குதான் ரொம்பவே வருத்தம் நான் பேச்சிலராக இருப்பதில்#முடியல
**************************************************

 இந்தியாவில் இருந்தேன்-வேலை இல்லை என்றார்கள். அமெரிக்காவில் வேலை செய்கிறேன் இந்தியாவில் நீ இல்லைஎன்றாங்க#பொண்ணை பெத்த புண்ணியவான்கள்
****************************************************

Saturday, March 3, 2012

படித்ததும் பிடித்ததும்-03/03/2012

ஈரானின் மீது போர் தொடுப்பதில் நீயா நானா என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் யோசித்துக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே அமேரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மூக்குடைப்பட்டு, பொருளாதாரமே சரிவுற்று கிடக்கிறது. இந்த நிலையில் இன்னொரு போரை அமெரிக்கா அரசு திணித்தால் அமெரிக்க மக்களே தெருவில் இறங்கி கல் வீச தயாராகி விடுவார்கள். இந்த விஷயம் ஈரானுக்கும் நன்றாகவே தெரியும். இஸ்ரேல ஒரு போரை நடத்தும் அளவுக்கு வல்லமை கொண்ண்ட நாடா என்பது சந்தேகமே. ஈரானின் அணு விஞ்ஞானியை கொல்லப்பட்டதால் கடும் கோபத்தில்  இருக்கிறது ஈரான். நேற்று கூட போர் வேண்டாம் என ஒபாமா இஸ்ரேல அதிபர் நெதன்யாவுடன் பேசியதாக செய்திகள் வெளி வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

  *************************************************

இணையத்தில் சமீப காலமாக விஜயை கலாய்ப்பதை  நிறுத்திவிட்டார்கள் போலும். அதற்கு பதிலாக விஜய் டிவியில் "ஒரு கோடி" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூர்யாவை மையம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில் அந்த கேள்விகளை எல்லாம் இரண்டு வயது குழந்தை கூட சொல்லிவிடும். இதில் சூர்யாவின் குற்றம் ஏதும் இல்லை என்றாலும் பணம் தருகிறார்கள் என்பதற்காக இப்படி நிகழ்ச்சிகளில் மாட்டிக்கோடு அசிங்கப்படுவானேன்!!!



************************************************************
 இந்திய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம் போல. கிரிக்கெட் என்பது ஒரு மதம் போல பாவிக்கப்டுவது நம்ம ஊரில் மட்டுமே. ஒரு பிளேயர் சரியாக விளையாடவிட்டாலும் அவரை தூக்கி அடிக்க மற்ற கிரிக்கெட் வாரியங்கள் தயங்குவதில்லை, சமீபத்திய உதாரணம் ரிக்கி பாண்டிங் . மூன்று முறை ஆஸ்திரேலியா அணிக்கு உலககோப்பை வங்கி தந்த ஆளுக்கு இந்த நிலைமை. நாம் இன்னும் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களை தெரிவு செய்யாமலே இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு கால அளவு இருக்கிறது, இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரெப்ரெஷ் பொத்தானை அழுத்தவேண்டிய நேரமிது, விழித்துகொள்ளுமா  இந்திய கிரிக்கெட்  வாரியம்???
******************************************************
அரவான் படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் பதிவுகளில் படித்து ரொம்பவே குழம்பி போயுள்ளேன், நல்ல இருக்கு என ஒரு சாரரும் மொக்கை என ஒரு சாரும் சொல்லி என்னை ரொம்பவே குழப்பி விட்டுள்ளனர். ஆனாலும் பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன், எந்த பெரிய எதிர்ப்பார்ப்பும் வைத்து கொள்ளாமல்!!!
****************************************************
நம்ம டி ஆரோட ரீமிக்ஸ் பாட்டு!!!

 ********************************************
 டி ஆருக்கு அப்படி ஒரு முகம் இருந்தாலும் இந்த பாடல் ஒரு மாஸ்டர் பீஸ். உயிருள்ளவரை உஷா படத்திற்காக "வைகை கரை கற்றே நில்லு" அவரே இசையமைத்து எழுதிய பாடல். இதில் ஸ்பெஷல் என்னனா யேசுதாசின் குரல். காதல் சோகத்தை இதை விட எப்படி பாடி விட முடியும். 

****************************************************
 அன்புடன் 
அசோக் குமார்