மழை கவிதைகள்-I
சூரிய காதலன்
ஏ மழையே! நான் வருவேன்
என தெரிந்து பூக்களுக்குள்
ஒளிந்து இருந்தாய் பூக்களை
பற்றி தான் எனக்கு தெரியுமே.
எனை பார்த்து பூக்கள்
மலர்ந்து உன்னை
காட்டி கொடுத்துவிட்டனவே
=========================================================
ஆலங்கட்டி மழை
உதிர்ந்த
வெண்முத்துகளை
எடுக்கத்தான்
முடிந்தது
கோர்த்து
வைக்க நான்
என் செய்வேன்
===================================================
மழை வேண்டி
யாகம் வளர்கிறார்கள்
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம் என்கின்றனர்
பெண்கள் எல்லாம் சேர்ந்து
ஊர் எல்லையில் கூடி
அழுகிறார்கள் மரம் வளர்ப்பதை
மட்டும் தவிர்த்து
==========================================================
நனைவது பிடிக்கும்
சிலருக்கு மழையில்
நனைவது
பிடித்தமான ஒன்றுதான்
குடையை மறந்த
நாட்களில் மட்டும்
=======================================================
நல்லவர் ஒருவர் உளரேல்
இப்போதெல்லம்
நல்லவர்களை
அடையாளம் காட்ட
மட்டும்தான்
வருகிறாய்
போலும்
=========================================================
அன்புடன்
அசோக் குமார்
சிலருக்கு மழையில்
ReplyDeleteநனைவது
பிடித்தமான ஒன்றுதான்
குடையை மறந்த
நாட்களில் மட்டும்
நல்ல வரிகள்