Friday, September 9, 2011

காந்திமதி - மின்னாமலே மறைந்த நட்சத்திரம்

பதினாறு வயதினிலே படத்தை பார்த்தவர்கள் சப்பாணி, மயிலு , பரட்டையை மட்டும் ரசிக்கவில்லை, "குருவம்மா" என்ற அடாவடியான கதாபாத்திரத்தில் நடித்த காந்திமதியையும்தான். கோழி காணமல் போனதும் இவர் அடிக்கும் சண்டையும், காணமல் போன கோழி கிடைத்தவுடன் இவர் பதறும் காட்சியும் குணசித்திர நடிப்பில் தனக்கென ஒரு பாணியை வகுத்து கொண்டு இவர் செய்த பாத்திரங்களில்தான் எத்தனை வித்தியாசம்.
 
 கிராமத்து வேடம் என்றால் அதற்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திவிடும் அளவுக்கு அந்தந்த பாத்திரங்களை தன் நடிப்பால் சிறக்க வைத்தவர். கரகாட்டக்காரன் படத்தில் இவர் ராமராஜனின் அம்மா வேடத்தில் கலக்கி இருப்பார். அதுமட்டுமின்றி சின்னதம்பி பெரியதம்பி, மண்வாசனை, கிழக்கே போகும் ரயில், முத்து மற்றும் ராசையா போன்ற படங்களிலும் தன் முத்திரை நடிப்பால் நம்மை எல்லாம் கவர்ந்தார். 


இதுவரை 300  படங்களில் நடித்துள்ள காந்திமதி நேற்று இதய நோயால் பதிக்கப்பட்டு மறைந்தது தமிழ் திரை உலகத்திற்கு பேரிழப்பு. இவர் திறமைக்கு தமிழ் திரை உலகம் சரியான அங்கிகாரம் கொடுக்கவில்லையோ என்று கூட தோன்றுகிறது. எப்படியோ அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 

அன்புடன்

அசோக் குமார்

3 comments:

  1. அருமையான நடிகை

    ReplyDelete
  2. unmai. ivangala pathi last week than oru discussion vachom... but ippa ivanga illa. superb actrs .. tamil cinma innum nalla use panni irukalam ivangala.. ( never frgt man vasanai,muthu & 16 vayadinliey)

    ReplyDelete