Monday, April 18, 2011

படித்ததும் பிடித்ததும் -19.04.2011

தொடரும் மீனவர்கள் படுகொலை 
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவி சோனியா இனி மீனவர்கள் காக்கபடுவார்கள் என உறுதி அளித்து போனார். போன ஒரு மாதத்துக்குள் நான்கு மீனவர்கள்   படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இந்திய மீனவன் இறந்தான் என்று செய்தி வெளிடுவதில்லை, மாறாக தமிழ் மீனவன் இறந்தான் என்றே செய்தி வெளியிடுகிறன. தமிழ் நாடு எப்போது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று தெரியவில்லை.
=========================================================
தே‌‌ர்த‌ல் நேரத்தில்  நட‌ந்த சோதனை‌யி‌‌ல் கை‌ப்ப‌ற்ற‌‌ப்ப‌ட்ட 49 கோடி பண‌த்தை யாரு‌ம் ‌திரு‌ப்‌பி வா‌ங்க வர‌வி‌ல்லை எ‌ன்று த‌மிழக தலைமை அ‌திகா‌ரி ‌‌‌‌பிர‌வீ‌ண்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். அதன் பிறகு இதுவரை யாரும் மீதம் உள்ள 49 கோடி ரூபா‌ய் பணத்தை திருப்பி வாங்க வரவில்லை எ‌ன்றா‌ர் ‌பிர‌‌‌வீ‌ண்குமா‌ர். இவை கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணமாக இருக்கலாம் எ‌ன்று‌ம் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணம், ஆதராம் இருப்பவர்கள் பணத்தை திரும்ப பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று‌ம் ‌பிர‌வீ‌ண்குமா‌ர் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 54 கோடியே 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது. சொந்த பணமாக இருந்தால் தானே திறப்பி கேட்க!!!
============================================================
  தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து, 19 பேர் நீக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை நீக்கக்கோரி, பல்வேறு இடங்களில், கட்சியினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அதன்படி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டார இளைஞர் காங்கிரசார், தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்தனர்."கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 19 பேரையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். என வலியுறுத்தி கட்சியினர் கோசமிட்டுள்ளனர். கட்சி தொண்டர்கள் தன கட்சி தலைவரின்  உருவ பொம்மையை எரித்தது வரலாற்றில் முதல் முறை என நினைக்கிறேன். வாழ்க காங்கிரஸ் கட்சி வளர்க அதன் கொள்கை!!
=========================================================
நான் ரசித்த காணோளி
வார்த்தைகளின் முக்கியத்துவம் என்னவென்று அறியாமல் பேசும்போது நாம் இழப்பவைகள் நமக்கே தெரிவதில்லை. சிறு வார்த்தை மாற்றமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தகூடியவை. இந்த காணோளியை பார்த்தாலே புரியுமே!!!!!

===========================================================
தேன் கிண்ணம்  
 இந்த பாட்டு வெள்ளி விழா படத்துக்காக  V.குமார் இசை அமைத்தது. இந்த படத்தில் ஒரு வித்தியாசம் என்னன்னா அதுவரை இனிமையான பாட்டுகளை P.சுசீலா பாடி வந்தார். இவருக்கு நேரெதிர் L.R. ஈஸ்வரி, கொஞ்சம் சத்தமான ராப் மாதிரி பாட்டுகளையே  பாடி வந்தார். V.குமார் இந்த படத்தில் இவர்களை அப்படியே மாற்றி பாட வைத்தார். L.R. ஈஸ்வரி, "காதோடுதான் நான்" என்ற இனிமையான பாட்டையும் , P.சுசீலா "நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்" என்ற சத்தமான பாட்டையும் பாடி ஒரு புதுமை படைத்தார்கள்.


அன்புடன் 
அசோக் குமார்





No comments:

Post a Comment