Monday, April 25, 2011

ஆதலினால் காதல் செய்வீர்


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 
         வரம்புகளை ஆராய்ந்துகொண்டு 
இருக்கிறேன் உன் மனதில்- நான் 
           இருக்கிறேனா என்ற தகவலை 
அறிந்து சொல்லுமா என??

 ---------------------------------------------------------------------------

 
எகிப்து பிரமீடுகளை 
உன் கன்னங்களில் 
தங்கி செல்கிறாய் 
நான் உன் முக 
பருக்களை சொன்னேன்!!
-------------------------------------------------------------------------------


என் வீட்டு ஜன்னல்களை 
கடக்கையில் நான் இருக்கிறேனா 
என தெரிந்து முத்தங்களை பறக்க 
விடு  இப்போதெல்லாம் என் 
வீட்டு ஜன்னல்களை 
என்னால் நம்பமுடிவதில்லை !!!

அன்புடன்
அசோக்  குமார்  

No comments:

Post a Comment