Wednesday, March 30, 2011

படித்ததும் பிடித்ததும்

படித்ததும் பிடித்ததும் 

கிரிக்கெட்அரை இறுதி :  இந்தியா வெற்றி


அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானை வெற்றி பெற்றதன் மூலம்  இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து மும்பையில் விளையாட உள்ளது. மறுபடியும் சச்சின் 85 ரன்கள் அடித்து வயதுக்கும் ஆட்டத்திற்கும் சம்மந்தம் இல்லை என நிரூபித்துள்ளார். பாகிஸ்தான் வீர்கள் நன்றாக போராடினார்கள். அப்ரிடி மிக நன்றாக பேசினார் இறுதியில். இன்சமாம் போல இல்லாமல் மிக நன்றாக பேசினார். ஆட்டத்தில் வெல்லாவிட்டாலும் நம் மனங்களை வென்றுவிட்டார்.
=========================================================
ஆஸ்திரேலிய அணி காப்டன் மாற்றம்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி காப்டன் ரிக்கி பாண்டிங் மாற்றப்பட்டு கிளார்க் காப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எல்லாம் இந்தியாவிடம் தோற்ற நேரம் போலும். இரண்டு முறை  அணிக்காக கோப்பை ஜெயித்தவர்.

"தீதும் நன்றும் பிறர் தர வரா"  


=====================================================================
சாட்டையடி கொடுத்த பொது ஜனம்

தினமலர் இன்றைய காணொளி காணும்போது மதுரையை சேர்ந்த ஒரு நபர் 'எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' போர்டு வைத்துள்ளார்.

"நாமும் பின்பற்றலாமே, நல்ல மனிதர்- வாழ்க"

============================================================
தேன் கிண்ணம்
இந்த பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கும், அடுத்த வீடு பெண் படத்தில் இருந்து "கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே". பி. பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் தேமதுர குரலில். தங்கவேலு நடிப்பில் பிரமாதபடுத்தி இருப்பார். அஞ்சலி தேவியின் சொந்த தயாரிப்பில் வெளி வந்த படம்.

 

==========================================================

அன்புடன் அசோக் குமார்

2 comments:

  1. அழகான அருமையான கதம்பப் பதிவு.. நன்றாக இருந்தது.. காசுக்காக வாக்களிக்கும் மாக்கள் இருக்கும்வரை மக்களாட்சி மலர வாய்ப்பில்லை..

    ReplyDelete
  2. "புலி வால் பிடித்தவன்" என்ன ப்ளாக் எழுதவந்ததை குறிப்பிடுகிறீர்களா..???

    ReplyDelete