Saturday, July 9, 2011

நல்லா கேட்டான்யா டிடைல்லு -சொந்த அனுபவம்


நம்ம மாநிலத்தை விட்டு பக்கத்துக்கு மாநிலத்துக்கு போனாகூட அங்க நம்ம ஆளுகளை பார்த்துட்டா நமக்கு வர சந்தோசத்துக்கு அளவே இருக்காது.   அது மாதரி  குசலம் விசாரிக்க போய் நான் மாட்டிகிட்ட ஒரு சம்பவத்தை இங்கே உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன். பிற்காலத்தில் யாராவது அமேரிக்கா வந்தால் அவங்களுக்கும் உபயோகமா இருக்கும்.

  நான் அமெரிக்க வந்து ஒரு வாரமே ஆன காலம் அது. உள்ளுரில் நாம புலியா இருந்தாலும் வெளியூரோ,  வெளி நாடோ போனால் எது எது எங்கே இருக்கிறது எங்க போனால் என்ன கிடைக்கும் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள நாள் ஆகும். அப்படி என் கூட வேலை பார்த்த மக்களை கேட்டு பக்கதுல இருக்கிற ஒரு பலசரக்கு கடை (Grocery store) ஒன்னை கண்டுபிடிச்சி ஒரு சாயந்திர நேரமா போய் சேர்ந்தேன். கூட்டம்னு பெருசா ஒன்னும் இல்ல. அந்த வாரத்துக்கு தேவையான பால் கொஞ்சம் ரொட்டியும் வாங்கிகிட்டு இருக்கும் போது "ஹலோ " அப்படின்னு ஒரு அபலக்குரல்.

திரும்பி பார்த்தால் அஞ்சரை அடி உயரத்துல பார்த்தாலே பளிச்சுனு தெரிஞ்சது அண்ணன் மென்பொருள் எழுதுற ஆளுன்னு. நானும் ஹெல்லொன்னு சொல்லிவச்சேன். அவர் பெயர "பிரகாஷ் " அப்படின்னும்  'சநோசெல'(sanjose) வேலை பாக்கறேன்னும்   சொன்னாரு. அமெரிக்கா வாரத்துக்கு முன்னாடி சென்னைலதான் வேலை பார்த்ததாகவும் சொன்னாரு.  நானும் என்னை பத்தி சுருக்கமா சொன்னேன். பேசி முடிஞ்சதும், உங்க கூட நான் நட்பு வச்சுக்க ஆசைபடறேன் உங்க செல் போன் நம்பரை கொடுங்களேன் அப்படின்னு   கேட்டாரு அண்ணாச்சி. இந்த ஊர்ல இப்படி ஒரு நல்லவர்னு நெனச்சு நம்பரை கொடுத்து  வங்கிகிட்டோம். (இங்கதான் சனி அன்னிக்கு  ஆரம்பிக்கும்னு எனக்கு தெரியல).

ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணாரு அண்ணாச்சி, இங்க பக்கதுல ஒரு கால் பந்து போட்டி நடக்குது வரிங்களா நானே என் கார்ல வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு. ஆனாலும் எனக்கு இருந்த வேலை பளுவில் என்னால போக முடியல. அதே மாதிரி ரெண்டு மூணு தடவை போன் பண்ணி கூப்பிட்டாரு. என்னால போக முடியல. இப்படியே ஒரு மூணு மாசம் ஓடிப்போச்சி.  திடீர்ன்னு ஒரு நாள் போன் பண்ணி நான் இருக்கிற இடத்துக்கு  பக்கதுல இருக்கிற காபி கடைக்கு வாங்க சந்திப்போம்,  இந்த பக்கமா வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு கூப்டேன்னு பில்ட் அப் வேற கொடுத்தாரு அண்ணாச்சி.

நானும் , அமெரிக்க ஏழைகளின் ஒரே வாகனமான நம்ம சைக்கிளை எடுத்துகிட்டு அவர் சொன்ன எடத்துக்கு போய் சேர்ந்தேன். சொன்ன மாதிரி நமக்கு முன்னாடியே அண்ணாச்சி வந்து காத்துகிட்டு இருந்தாரு. வழக்கமான குசல விசாரிப்புகள் முடிஞ்சா உடனே தன் பொட்டிய தெறந்து ஒரு லேப்- டாப் எடுத்து ஏதோ ஒன்னை தட்டினாரு. ஒரு வெப் பக்கத்தை திறந்து, அவரு ஒரு ஆன்லைன் வர்த்தகம் பண்றதாகவும் நானும் 200  டாலர் கட்டி சேர்ந்துக்க சொல்லியும் சொன்னாரு. "ஏதோ  முருகன் படம் இல்ல வினயாகர் படம் டாலர்னா  பரவால்ல எத்தனை வேணும்னாலும்  வாங்கி  கொடுத்துடலாம்.ஆனா அவரு கேட்டது அமெரிக்க டாலர்".

அப்புறம் இதுமட்டுமில்லாம நான் அஞ்சு பேரை இந்த கருமத்துல சேர்த்து வேற விடணுமாம். சரி அத்தோட விடுவான்னு பார்த்தா அஞ்சு பேருக்கு போனை  போட்டு எனக்கு மூளை சலவை செய்ய வச்சான். அதுல ஒருத்தன் சொன்னான் பாருங்க. அஞ்சு வருஷம் இதுல இருந்த கிட்டத்தட்ட "பில் கேட்ஸ்"  அளவுக்கு நீங்க பணக்காரனா ஆயுடுவீங்கனு (பில் கேட்ஸ் மன்னிக்க). நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.  சரி நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு (வேற எப்படி தப்பிகறது) நான் குடிச்ச காபிக்கு பணத்தை கொடுத்து விட்டு அந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு வந்தவன்தான்.

மறுபடியும் இரண்டு மூன்று முறை போன் செய்தான் எடுப்பேனா ??? எலி ஏன் நிர்வாணமாய் ஓடுகிறது  என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.. !!!

அன்புடன் 
அசோக் குமார்

3 comments:

  1. Ashok Kumar : Sorry .....Wrong number ....hi..hi..

    ReplyDelete
  2. அங்கேயுமா?
    இந்த கொடுமையை பண்ணுறாங்க நம்ம ஆளுங்க...

    ReplyDelete