Wednesday, November 2, 2011

படித்ததும் பிடித்ததும் 03/11/2011


இளையராஜா  அவர்களின் மனைவி ஜீவா இளையராஜா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
---------------------------------------------------------------------------------------------------
  என்னடா ஒருத்தர் தன் குடும்பத்தையே வச்சு எல்லோரையும் சுரண்டறார்னு இந்த அம்மாவை உட்கார வச்சா, அதை மாத்தறேன் இதை மாத்தறேன் அப்படின்னு  சொல்லி காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் ஒன்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எதிரானவன் அல்ல. ஆனாலும் நன்றாக இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு நூலகத்தை தேவை இல்லாமல் கை வைத்து தன் பெயரை கெடுத்துக்கொள்ள (கெடுத்துகிட்டு ஆச்சு ) போகிறார் என்றே தோன்றுகிறது.அதற்காக நல்ல இடமாக பார்த்து ஒரு கட்டிடம் கட்டிவிட்டு போங்களேன். கருணாநிதி கட்டிய அனைத்தையும் மாற்றலாம் என்று கிளம்பினால் அப்புறம் மக்கள் எங்கே நலப்பணி எங்கே. இது தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு போலும். பேசாமல் கவர்னர் ஆட்சியை தமிழ் நாட்டில் அமல்படுத்திவிடலாம்.
---------------------------------------------------------------------------------------------------
 வெகு நாட்களுக்கு பிறகு உருப்படியான ஒரு வேலையை செய்திருக்கிறார்கள். ரங்கநாதன் தெருவில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைத்து மூடி இருக்கிறார்கள்.  ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்டு சில உயிர்களை காவு கொடுத்தும் இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. திரும்பவும் இது போன்ற தவறுகள் ஏதும் நடக்காமல் பார்த்துகொள்வது அவசியம் .
-----------------------------------------------------------------------------------------------------
போதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள்  முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே !! ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.
----------------------------------------------------------------------------------------------
 நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க (பேஸ் புக்கில் கண்டுஎடுத்தது ).
---------------------------------------------------------------------------------------------------
 இளையராஜா அவர்களின் இசையில் வெளிவந்த "இன்று நீ நாளை நான்" படத்தின் இந்த பாடல் எப்போதும் கேட்க தூண்டும். S. ஜானகி அவர்கள் எவ்வளவோ பாடல்கள் பாடி இருந்தாலும் இந்த பாடல் அவர்கள் இசை பயணத்தில் இந்த பாடல் ஒரு வைரக்கல். 

---------------------------------------------------------------------------------------------
அன்புடன் 
அசோக் குமார் 

4 comments:

  1. //
    இளையராஜா அவர்களின் மனைவி ஜீவா இளையராஜா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்//

    நானும்

    ReplyDelete