Wednesday, July 20, 2011

விடியல் ஒன்றுதான்


சேவலின் விடியல் 
கூவலோடு  தொடங்குகிறது

 பூக்களின் விடியல்  
மலர்தலோடு தொடங்குகிறது

சாலைகளின் விடியல் வாகன 
இரைச்சலோடு  தொடங்குகிறது

புது கணவன் மனைவியின் விடியல் 
முத்தத்தோடு தொடங்குகிறது

குடிகாரனின் விடியல் சாராயத்தின் 
நெடியோடு தொடங்குகிறது 

குழந்தையின்  விடியல்
அழுகையோடு தொடங்குகிறது

பார்வை அற்றவனின் விடியல் 
இருளோடு தொடங்குகிறது!!

ஏழையின் விடியல் என்றும் 
ஏக்கத்தோடு தொடங்குகிறது

போராளிகளின் விடியல் 
யுத்தத்தோடு தொடங்குகிறது!! 

விடியல் மட்டும் 
எல்லோருக்கும் ஒன்றுதான் !!!


அன்புடன் 
அசோக் குமார்


10 comments:

  1. விடியல் குறித்த தங்கள் படைப்பு அருமை
    தங்கள் விடியல் என்றும் இதுபோன்ற
    அழகான கவிதையோடு பிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான விடியல் ...வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. முடிவுல இருக்கு நச்..!!!

    //விடியல் மட்டும்
    எல்லோருக்கும் ஒன்றுதான் !!!//

    இதற்கு முன்னர் இருப்பதற்கும் இதற்கும் கோர்வை மிஸ் ஆவது போல ஒரு ஃபீலிங்.. !!! மத்தபடி சொல்ல வந்தது அருமை..

    ReplyDelete
  4. அருமையான வரிகள்

    ReplyDelete
  5. அருமையான விடியல் கவிதை..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. // Ramani said...

    விடியல் குறித்த தங்கள் படைப்பு அருமை
    தங்கள் விடியல் என்றும் இதுபோன்ற
    அழகான கவிதையோடு பிறக்க வாழ்த்துக்கள் //

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. // koodal bala said...

    அருமையான விடியல் ...வாழ்த்துக்கள் ! //

    நன்றி பாலா !!

    ReplyDelete
  8. தம்பி கூர்மதியன் said...

    முடிவுல இருக்கு நச்..!!!

    //விடியல் மட்டும்
    எல்லோருக்கும் ஒன்றுதான் !!!//

    இதற்கு முன்னர் இருப்பதற்கும் இதற்கும் கோர்வை மிஸ் ஆவது போல ஒரு ஃபீலிங்.. !!! மத்தபடி சொல்ல வந்தது அருமை..//

    கவிதை எழுதுவதில் பெரிய புலமை இல்லை . விடியல் ஒன்றுதான் ஆனால் தொடக்கம் தான் வித்தியாசப்படுகிறது என சொல்ல நினைத்தேன். திருத்திக்கொள்ள பார்க்கிறேன். பின்னூடத்திற்கு நன்றி.

    ReplyDelete
  9. விடியல் பற்றிய கவிதை அருமை

    ReplyDelete