tag:blogger.com,1999:blog-6362379967648676929.post6536224678340708010..comments2023-10-30T06:22:33.953-07:00Comments on புலி வால் பிடித்தவன்: நடிகர் கமலஹாசனுக்கு கவிஞர் அறிவுமதி கண்டனம்- நான் ஆமோதிக்கிறேன்தடம் மாறிய யாத்ரீகன்http://www.blogger.com/profile/15040558609278985729noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6362379967648676929.post-91991032011033905812011-06-17T07:06:53.411-07:002011-06-17T07:06:53.411-07:00இந்த பதிவை இன்று தான் பார்த்தேன். அதனால் இன்று பதி...இந்த பதிவை இன்று தான் பார்த்தேன். அதனால் இன்று பதிலளிக்க விரும்புகிறேன். உங்களை போல அல்ல. நான் கமல் ரசிகன். அவரை போலவே ஜாதி மதங்களை பெரிதாக நினைப்பவன் அல்ல. ஆனால் நீங்கள் அப்படி அல்ல. உங்கள் பதிவே ஒரு இனத்திற்கு ஆதரவாக சுயநலத்துடன் எழுதப்பட்டது. தமிழ் உணர்வு இருக்கும் யாருமே நம் ஈழ சகோதரர்கள் பட்ட துன்பத்தை மறக்க மாட்டார்கள். அதற்கும் கமல் என்ற நடிகர் படம் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம். ஏன் உணர்ச்சி மிகுதியால் ஒரு கூத்தாடி சொல்வதை இவளவு பெரிய விஷ்யமாக்குகிறீர்கள். பெரிய ஆட்களுடன் மோதினால் நம் பெயரும் வெளிவரும் என்ற நப்பாசையா?. வடிவேலுவுடன் அல்லக்கையாக நடிக்கும் 'போண்டா மணி' ஒரு ஈழத்தமிழர். தெரியுமா?? வடிவேலு எல்லா படத்திலேயும் அவரை கேவலமாக திட்டுவதும் அடிப்பதும் போன்ற காட்சிகளை இதுவரை நீங்கள் பார்த்ததேயில்லையா? ஏன் அதற்க்கு நீங்கள் கொடி பிடிக்கவில்லை?? 'நான் பிராமணன் இல்லை' என்று ஆயிரம் தடவை கமல் சொன்னாலும் நீங்கள் தான் அவரை மீண்டும் மீண்டும் பிராமணன் ஆக்குகிறீர்கள். சாம்பிளுக்கு 'அவ்வை சண்முகி' படத்தில் ஒரு காட்சி -----> மீனாவின் பத்திரிகை விளம்பரத்தை பார்த்த கமல் நாகேஷிடம் 'பிராமண பெண்ணாக இருப்பது நல்லதாம் அண்ணே. இவா பாப்பாத்தி தானே?? இவ பாத்துகிட்டா என்னவாம்??' என்று சொல்வார். பிராமணர்கள் மத்தியில் சர்ச்சை எழுப்பிய காட்சி இது. வசனம் எழுதிய 'கிரேசி'மோகன் , நடித்த கமல், ஜெமினி கணேசன் ... எல்லாரும் பிராமணர்கள் தான். சும்மா எதோ ஒரு படத்தில் வரும் ஏதோ ஒரு காட்சியை வைத்து பொத்தாம் பொதுவாக முடிவு செய்யாதீர்கள். 'உயிரே' மணிரத்னம் , 'அங்கவை சங்கவை' சுஜாதா எல்லாம் இதில் எங்கு வந்தார்கள். சரி. அங்கவை சங்கவை காட்சி வைத்தது சுஜாதாவா?? அது 'ஷங்கர்' ங்க. தேடி போய் பாப்பான்களிடம் வம்பு வைப்பீரோ?? சரி இவ்வளவு சுஜாதாவை பற்றி சொல்கிறீர்களே?? அவரிடம் உள்ள தமிழ் புலமையில் பத்தில் ஒரு பங்கு உங்களிடம் உண்டா?? சரி அவர் இறந்து விட்டார். நீங்கள் கமலிடம் பேசி பாருங்கள். உங்களை விட சில மடங்காவது தமிழ் புலமை அவரிடம் இருக்கும். சும்மா வெறுமனே உணர்ச்சிகளை மட்டும் கொட்டாதீர்கள். கலைஞர்களை அவர்கள் போக்கில் போக விடுங்கள்.freeyavudu_mamehttps://www.blogger.com/profile/01120666904906395336noreply@blogger.com