Saturday, December 24, 2011

வெண்ணிற ஆடை படமும்-இயக்குனர் ஸ்ரீதரும்

ஸ்ரீதர் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு புகுத்திய புதுமைகள் எண்ணிலடங்காது. அந்த வகையில் சுமைதாங்கி படத்திற்கு பிறகு ஸ்ரீதர் முற்றிலும் புதுமுகங்களை வைத்தே எடுத்த படம்தான் "வெண்ணிற ஆடை". இந்த படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத நான்கு நட்சத்திரங்களை தந்தார் ஸ்ரீதர்.

  ஜெயலிலதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி என நான்கு பெரும் பின்னாளில் புகழடைந்தது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதற்கும் ஒரு படை மேலே போய் நிர்மலா  அவர்களும் மூர்த்தியும் பின்னாளில் வெண்ணிற ஆடையை அவர்களின் பெயருக்கு முன்னால்  சேர்த்துக்கொண்டு "வெண்ணிற ஆடை" மூர்த்தி , மற்றும்  "வெண்ணிற ஆடை" நிர்மலா என அறியப்பட்டனர். அதுவுமில்லாமல், அந்த வருடத்தில் ஸ்ரீதர் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக ஓடி பாராட்டையும் பெற்று தந்தது.


கதை என்னன்னு பார்த்தால், ஸ்ரீதரின் வழக்கமான முக்கோண காதல் கதை தான். மனநல மருத்துவரான ஸ்ரீகாந்த், மன நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை  குணப்படுத்த வருகிறார். ஸ்ரீகாந்திற்கும்
 வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கும் காதல். இந்த நிலையில் குணமடைந்த ஜெயலலிதாவிற்கு ஸ்ரீகாந்த் மேல் காதல். ஜெயலலிதாவின் தந்தை ஸ்ரீகாந்தை வற்புறுத்த முடிவு என்ன என்பது தான் "வெண்ணிற ஆடை" படத்தின் கதை.




முதல் படத்திலே ஜெயலலிதாவிற்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. ஸ்ரீகாந்தின் காதபாதிரம் ரொம்பவே எதார்த்தமாகவும், இரண்டு பெண்களின் காதலுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் எதார்த்த மனிதராக முதல் படத்திலேயே நடிப்பில் கலக்கி இருந்தார் ஸ்ரீகாந்த். வெண்ணிற ஆடை நிர்மலா இந்த படத்தில் நடிக்கும்போது ரொம்பவே இளைய வயது. ஆகா ஒரு இளமை பட்டாளத்தையே இந்த படத்தில் இறக்கி இருந்தார் ஸ்ரீதர்.


படத்தின் இசையை M.S. விஸ்வநாதன் கவனிக்க வழக்கம் போல் பிரமாத படுத்தி இருந்தார். "அம்மாமா காற்று வந்து", "ஒருவன் காதலன்', என்ன என்ன பார்வைகளோ " , "சித்திரமே  சொல்லடி", மற்றும் "கண்ணன் என்னும் பேரை" என்று னைத்து பாடல்களை பிரமாதப்படுத்தி இருந்தார் விஸ்வநாதன்.


இன்னமும் ஸ்ரீதர் அவர்களின் பெருமைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

 அன்புடன் 
அசோக் குமார்

1 comment: