Saturday, October 29, 2011

நீ போட்டாய் என் வாழ்வில் கோலம்

புள்ளி வைத்து கோலம் 
போட்டாய் -சொல்லி வைத்து 
நாமம் போட்டாய்
என் காதலுக்கு  !!
-------------------------------------------------------

நீ போட்ட 
கோலங்களுக்குள் சிக்கி 
கொண்டது புள்ளிகள் 
மட்டுமல்ல - என் 
இதயமும்தான் !!
-----------------------------------------------------

அரிசி மாவில் கோலம் 
போட்டு எறும்புகளுக்கும் 
உன் இரக்க குணத்தை 
காட்டுகிறாய் -என் 
காதலுக்கு எப்போது 
----------------------------------------------------

உன் கோலத்திற்கு நடுவில் 
இருக்கும் பூசணிப்பூ பிள்ளையாராகவாவது
வாய்ப்பு கொடு -உன் காலடியில் மிதிபடும்
பாக்கியமாவது கிடைக்கட்டும் !!
------------------------------------------------------

 அதிகாலையில் இருந்து 
உன் வீட்டுக்கு காவல் இருக்கிறேன் 
நீ போட்ட கோலத்தை 
யாரும் மிதித்துவிடக்கூடாதே என !!
----------------------------------------------------------

மார்கழி மாதமே முடிவு 
பெறுவதில்லை -உன் 
கோலத்தை பார்க்காமல் !!!
------------------------------------------------------------

நீ போடும் கோலமும் 
என் காதலும் 
ஒன்றுதான் -இரண்டும் 
சற்றேறக்குறைய  சிக்கலானது !!
------------------------------------------------------------

கிழக்கில் உதிக்கும் ஆதவனே 
கொஞ்ச  நேரம் காத்திருக்க 
வேண்டி இருக்கிறது -நீ 
போடும் கோலம் முடிவதற்காக !!
-------------------------------------------------------------

அன்புடன்
அசோக் குமார்


3 comments:

  1. மூன்றாம் கோணம்
    பெருமையுடம்

    வழங்கும்
    இணைய தள
    எழுத்தாளர்கள்
    சந்திப்பு விழா
    தேதி : 06.11.11
    நேரம் : காலை 9:30

    இடம்:

    ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

    போஸ்டல் நகர்,

    க்ரோம்பேட்,

    சென்னை
    அனைவரும் வருக!
    நிகழ்ச்சி நிரல் :
    காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
    10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

    11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
    12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
    1 மணி : விருந்து

    எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
    ஆசிரியர் மூன்றாம் கோணம்

    ReplyDelete
  2. நீ போட்ட
    கோலங்களுக்குள் சிக்கி
    கொண்டது புள்ளிகள்
    மட்டுமல்ல - என்
    இதயமும்தான் !!/

    அழகுக் கவிதைக் கோலத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. கோலம் போலவே கவிதையும் அருமை

    ReplyDelete