நேற்றைய தினமலர் நாளிதழில் வெளியான இந்த செய்தியை பார்த்துதான் இப்படியான கேள்வியை கேட்கவேண்டி இருக்கிறது. விவசாயத்தை நம்பி இருக்கிற நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட இந்தியாவில்தான் தன் சொந்த நிலத்தை பண்படுத்த எருதுகள் இல்லாமல் தன் மகன்களை வைத்து எருதுகளாக பூட்டி நிலத்தை உழுதிருக்கிறார்.
இந்தியாவின் விவசாயத்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான "மகாராஷ்டிராவில்தான் இந்த கொடுமை. அவருக்கு கிரிக்கெட்டில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே நேரம் போய்விடுகிறது போலும்.
எட்டு ஏக்கரில் தனக்கே சொந்தமான நிலம் இருந்தும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த மனிதர். இந்த நிலை மகாராஷ்டிராவில் மட்டும் இல்லை எல்லா மாநிலங்களிலும் இதை விட மோசமான நிலை இருக்கிறது. கௌரவத்திற்காக விவசாயம் செய்கின்ற சூழல் தான் இந்தியா முழுக்கவே இருக்கிறது.
பருவ மழைகள் பொய்த்து போவது ஒரு பிரச்னை என்றால், இது போன்று விவசாயத்திற்கான பொருட்கள் கிடைக்காமல் விவசாயமே மொத்தமாக நசிந்து போய்க்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம், கேட்பாரற்று கிடப்பது அவலமே. இந்த நிலையில் இந்தியா வல்லரசாவது 2020 -லா இல்லை 2030-லா என பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருப்பவர்களை பார்த்தால் இன்னும் இவர்களுக்கு பயிற்சி போதவில்லையோ என தோன்றுகிறது.
இந்தியாவின் விவசாயத்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான "மகாராஷ்டிராவில்தான் இந்த கொடுமை. அவருக்கு கிரிக்கெட்டில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே நேரம் போய்விடுகிறது போலும்.
எட்டு ஏக்கரில் தனக்கே சொந்தமான நிலம் இருந்தும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த மனிதர். இந்த நிலை மகாராஷ்டிராவில் மட்டும் இல்லை எல்லா மாநிலங்களிலும் இதை விட மோசமான நிலை இருக்கிறது. கௌரவத்திற்காக விவசாயம் செய்கின்ற சூழல் தான் இந்தியா முழுக்கவே இருக்கிறது.
பருவ மழைகள் பொய்த்து போவது ஒரு பிரச்னை என்றால், இது போன்று விவசாயத்திற்கான பொருட்கள் கிடைக்காமல் விவசாயமே மொத்தமாக நசிந்து போய்க்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம், கேட்பாரற்று கிடப்பது அவலமே. இந்த நிலையில் இந்தியா வல்லரசாவது 2020 -லா இல்லை 2030-லா என பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருப்பவர்களை பார்த்தால் இன்னும் இவர்களுக்கு பயிற்சி போதவில்லையோ என தோன்றுகிறது.
யோசிக்கவேண்டிய விடயம்
ReplyDeleteப்ளாக்கர் மற்றும் தளங்களுக்கான அழகிய பனர்கள்
கண்டிப்பா யோசிக்கணும்....
ReplyDeleteivanga ennathaan ulaichaalum.. ulaippuku yetra oothiyam kidaikkaathu.. idaitharagargal... dealers, distributors ku kidaikura laabamla 50% kda vivasaaee ku kidaikaathu.. oru blog eluthi post pannama vivasaayam pathi vachu irukken... net wk end la poduren... in that i will put your link also
ReplyDelete